Thursday, August 14, 2008

படித்ததில் பிடித்தது

தொட்டுப் பேசுவது நட்புக்கு அழகாம்
தொடாமல் பேசுவது காதலுக்கு அழகாம்
நம் கண்கள் நான்கும் காதலில் இருக்க‌
உதடுகள் மட்டும் நட்பிலேயே இருப்பது ஏன்?

--------------------------------------------------------------

எனக்கு
கவிதை
எழுதத் தான்
தெரியும்

உன்னை
போல
கவிதையாகவே
இருக்கத் தெரியாது

---------------------------------------------------------------

ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது
‍'ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே இருக்கிறது?' என்று!

---------------------------------------------------------------

அடிக்கிற கைகள் எல்லாம்
அணைக்குமா என்பது தெரியாது.
ஆனால் நீ அடிப்பதே
அணைப்பது மாதிரிதான் இருக்கிறது.

---------------------------------------------------------------

உனக்கு வாங்கி வந்த
நகையைப் பார்த்து
'அய்... எனக்கா இந்த நகை'
என்று கத்தினாய்.
நகையோ,
'அய்... எனக்கா இந்தச் சிலை'
என்று கத்திய‌து.

Labels: